Monday 17 February 2014

வாழ நினைத்தால் வாழலாம்!


வாழ்க வளமுடன்

கொடுப்பதே திரும்பி வரும் :

"எதை கொடுக்கிறோமோ , அது தான் நமக்கு திரும்பி வருகிறது . துன்பத்தைக் கொடுத்தால் துன்பம் தான் வரும்.அன்பைக் கொடுத்தால் அன்பு வரும்.இந்த இறைநீதியை உணர்ந்து அதன் வழியே அறநெறி வாழ்க்கை வாழ்ந்தால் நாம் அமைதி, இன்பம் , பேரின்பம் அடையலாம்.

ஒருவர் மேல் குறையைச் சொல்வதை விட , அவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் செயல்களையும் சுட்டிக் காட்டி அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறும் பொழுது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மன அமைதி வருகிறது . சந்தோஷமாகவும் இருக்கலாம்."

--அருள் தந்தை